Sunday , March 24 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யுத்தகுற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் அவசியம்: சந்திரிகா

யுத்தகுற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் அவசியம்: சந்திரிகா

யுத்தகுற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் அவசியம்: சந்திரிகா

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு யாரேனும் ஒரு தரப்பினர் பொறுப்பேற்க வேண்டுமென தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பொறுப்புக்கூறலை விட தமது எதிர்காலம் தொடர்பாகவே தமிழ் மக்கள் அதிக சரிசனை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்விடயத்தைக் குறிப்பிடடுள்ளார்.

அத்தோடு, தேசிய நல்லிணக்கத்திற்கான கொள்கையும் புதிய அரசியலமைப்புமே தற்போது அவசியமாக உள்ளதென தெரிவித்த சந்திரிகா, அரசாங்கம் இவை குறித்து அதிக கரிசனையுடன் செயற்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யுத்தத்தால் கணவனை இழந்த பெண்கள் ராணுவத்தினராலும் ஏனைய அரச அதிகாரிகளாலும் தொடர்ந்தும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்றும் இதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மேலும் தெரிவித்தார்.

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை - மஹிந்த

வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை – மஹிந்த

வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை – மஹிந்த தெற்கு மக்களின் ஆதரவில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்  பெற்றிருந்தாலும் வடக்கு மற்றும் …