விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாகபாம்புக்கு பால் ஊற்றி வழிபாடு செய்து அதன் மயக்கத்தைப் போக்கினர் பக்தர்கள். இந்தச் சம்பவம் நேற்று மாலை வல்லை நாகதம்பிரான் ஆலய வீதியில் நடந்துள்ளது. வீதியை நாகபாம்பு கடக்க முயன்றது. அப்போது மோட்டார் சைக்கிளுக்குள் சிக்கி அது காயமடைந்தது. அதைக் கண்டவர்கள் பாம்மை நாகதம்பிரான் ஆலயத்தில் வைத்து பாலூற்றி அதன் மயக்கத்தைப் போக்கினர். பின்னர் அந்தப் பாம்பை வழிபட்டனர். பாம்பு மயக்கம் நீங்கி …
Read More »துப்புரவாக்கப்பட்ட காணியில் வெளிப்பட்டது நிலக்கீழ் அறை!!
பளை, அரசர்கேணியில் நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்று நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டது. காணியின் உரிமையாளர் நேற்றுக் காணியைத் துப்புரவு செய்தபோதே நிலக்கீழ் பதுங்குழி தென்பட்டது. இந்தப் பதுங்கு குழி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் பயன்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகின்றது. பதுங்கு குழி இருப்பது தொடர்பில் இராணுவத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். பதுங்கு குழியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த இராணுவத்தினர், அதுவரை காணியில் எந்த …
Read More »முல்லைக் கடலில் கண்டெடுக்கப்பட்ட விசித்திரச் சங்கு
முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது இந்தச் சங்கு கண்டெடுக்கப்பட்டது. சங்கின் வெளிப்பகுதி தோற்றம் ஒரு பூசணிக்காய் போன்று காணப்படுவதாகவும், உள்பகுதி ஒரு பறவை போன்று விசித்திரமாக காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More »தமிழரின் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து
தமிழரின் தாயக பூமியான, வடக்கு– – கிழக்கு மாகாணம் தமிழரின் கையை விட்டுச் சென்றால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். இந்தப் பேராபத்தைக் கருத்திற் கொண்டு – கரிசனையில் எடுத்து இந்திய அரசு தமது அயலுறவுக் கொள்கையில் மாற்றங்களை உடனடியாகக் கொண்டு வரவேண்டும் என்று ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இந்தியப் பத்திரிகையாளர் தி.ராமகிருஸ்ணன் எழுதிய ‘ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்’ என்ற நூல் அறிமுக விழா …
Read More »நாடு திரும்பினார் அரச தலைவர் மைத்திரி
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அவர்கள் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடந்த 15 ஆம் திகதி லண்டன் சென்றிருந்தனர்.
Read More »ஊழல், மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
வடக்கு மாகாண சபையின் ஆளுகைக்குட் பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள் ஆகியவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கையின் பரிந்து ரைகளை விரைந்து – சபையின் ஆயுள் காலத் துக்குள் – எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் திகதிக் குள் நிறைவேற்றுமாறு எதிர்வரும் வியாழக் கிழமை இடம்பெறவுள்ள மாகாண சபை அமர் வில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. நிதி மோசடிகள், அதிகார முறைகேடுகள் உள் ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் காலத்துக்குக் …
Read More »பால்மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்!!
பால்மா ஒரு கிலோ 75 ரூபாவாலும், சமையல் எரிவாயு 245 ரூபாவாலும் இன்னும் சில தினங்களில் அதிகரிக்கப்படலாம் எனத் தெரிவருகிறது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் பால்மா விலை மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் பால்மா மற்றும் சமையல் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ள காரணத்தால், பால்மா மற்றும் காஸ் நிறுவனங்கள் விலையை அதிகரிக்கும்படி வாழ்க்கைச் செலவு …
Read More »வடக்கு முதல்வரின் புதிய முடிவு
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து கொள்கை பற்றுடன் செயற்படுவாராக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதனை வரவேற்கும் என அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளாா். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிக் கட்சி ஒன்றை உருவாக்க உள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக கேட்டபோதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் அவர் …
Read More »தற்காலிக வீடுகள் கூட இல்லாத கோயில்காடு மக்கள்!!
கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக வீடுகள் கூட இன்றி மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வருவதாக இத்தாவில் கோயில்காடு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாவது: கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமமே இத்தாவில் கிராமம். குறித்த கிராமத்தில் உள்ள ஒரு பகுதியே கோயில்காடு பகுதி. குறித்த பகுதியில் பிரதேச செயலகத்தால் அரை ஏக்கர் காணி வழங்கப்பட்டு காணி இல்லாத மக்கள் …
Read More »ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு!!
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார். அதன்படி இந்த வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சு கடந்த வாரம் …
Read More »