Thursday , March 28 2024
Home / செய்திகள் (page 310)

செய்திகள்

News

துப்பாக்கியை கண்டே அஞ்சாதவர்கள் தொப்பியை பார்த்தா பயப்பட போகிறோம்: தமிழிசை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தமிழிசை செளந்திரராஜன் அப்போது செய்தியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழிசை ‘மீண்டும் தொப்பி சின்னத்தை தினகரனுக்கு கொடுக்க கூடாது என்று தேர்தல் கமிசனிடம் வலியுறுத்துவோம். கடந்த முறை எத்தனை லட்சம் தொப்பிகளை அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் இறக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே’ என்று கூறினார். அப்போது …

Read More »

மாணவன் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டிய ஆசிரியை

தெலங்கானா மாநிலத்தில் வகுப்பறையில் பேசிய 5வயது மாணவனின் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டிய ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் நர்சிங்கி அருகே உள்ள உப்பலகுடா கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஊரை சேர்ந்த 5 வயது சிறுவன் அந்த பள்ளியில் யூ.கே.ஜி வகுப்பில் படிக்கிறான். இந்த சிறுவன் வகுப்பறையில் இருந்தபோது சக மாணவனுடன் பேசியுள்ளார். வகுப்பு ஆசிரியை சிறுவனை கண்டித்துள்ளார். ஆனால் …

Read More »

வடக்கில் பிரபாகரனின் பிறந்த நாள் தெற்கில் அதிர்வை ஏற்படுத்தும் – சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினத்தை நாங்கள் இவ்வாறு கொண்டாடுவது தென்னிலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் தான் நாங்கள் இவ்வாறு கொண்டாடுகின்றோம். இது சட்டவிரோதமான நிகழ்வு அல்ல என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த இடத்தின் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பிறந்த நாள் கொண்டாட்டம், மர நடுகை நிகழ்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட அறிவிப்பு ஆகியவற்றுக்குப் பின்னர் …

Read More »

மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் – பொ.ஐங்கரநேசன்

மாவீரர்களுக்காகக் கண்ணீர் சொரியும் இக்கார்த்திகை மாதம் வானம் மழைநீர் சொரியும் மாதமுமாக இருப்பதால் மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களையும் நாட்டுவோம். இந்த உயிருள்ள நினைவுச் சின்னங்களில் எம்மாவீரச் செல்வங்கள் தினம் தோறும் முகம் காட்டுவார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் தினம் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மாவீரர்கள் …

Read More »

தமிழீழ உடை, கொடிகளுடன் கொழும்பில் பேரணி !

தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டும், சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகம் அடங்கியதுமான தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும், கறுப்புக் கொடிகளை நெற்றியில் கட்டியவாறும் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்திய பிவித்துரு ஹெல உறுமய, பேரணியையும் ஆரம்பித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமயவே தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்ட உடைகளுடன் கொழும்பிலிருந்து மாபெரும் உந்துருளிப் பேரணி ஒன்றை …

Read More »

தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம் யாழ்.பல்கலைக்கழகத்தில்

யாழ். பல்கலை

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இன்று கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வு இன்று முற்பகல் 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்துக்கு இடம்பெற்றது. தமிழீழத்தை சித்தரிக்கும் வகையில் கேக் அமைந்திருந்தது சிறப்பு அம்சம். அத்துடன் தலைவர் வே.பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் சுவரொட்டிகளும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு உள்பட வளாகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

Read More »

யாழ். பொம்மை வெளியில் ஆயுதங்கள் மீட்பு!

யாழ். – பொம்மைவெளிப் பகுதியில், உரப் பையில் கட்டபட்ட நிலையில், சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 10 பழைய ரி.56 ரக துப்பாக்கிகள், 6 எம்.எம் மோட்டார் குண்டுகள் ரவைகள், கைக்குண்டுகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களே இவ்வாறு, இனந்தெரியாத நபர்களினால் குறித்த இடத்தில் போடப்பட்டுள்ளன. இன்று (26) காலை அப் பகுதி மக்கள் அநாமதேய முறையில் பொதி ஒன்று இருப்பதைக் கண்டு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து, பொலிஸார் மற்றும் விசேட …

Read More »

கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கைது

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேர் புத்தளம் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரிகளால் இன்று(26) கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம்,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம்-தில்அடிய பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் சந்தேகத்திடற்கிடமான நபர்கள் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலக்கமையவே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் பெண்ணொருவரும் இருந்ததாக சிலர் தெரிவித்ததாகவும்,குறித்த சந்தர்ப்பத்தில் அவர் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read More »

பாகிஸ்தான் தலைநகரில் பதற்றம் ரப்பர் குண்டுகளை வெடித்து போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு

இதனால் அவர் பதவி விலகக்கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஒரு வார காலமாக தெஹ்ரிக் இ லபாயிக் ரா ரசூல் அல்லா அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு வந்தனர். இதனால் இஸ்லாமாபாத் முடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காததால் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அதிருப்தி அடைந்து அரசின்மீது கடும் கண்டனம் தெரிவித்தன. இதன்காரணமாக நேற்று …

Read More »

மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையினர் 4 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான மாலியில் 2013-ம் ஆண்டில் இருந்து மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மாலி மக்களை காப்பதிலும், அமைதி நிலவச்செய்வதிலும் அங்குள்ள ஐ.நா. அமைதிப்படையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இதுவரை அங்கு அமைதிப்படை வீரர்கள் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அங்கு நைஜர் நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ள மெனாகா மற்றும் மோப்தி ஆகிய …

Read More »