ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் பேச்சு நடத்திவருகின்றது.
குறித்த விடம் தொடர்பில் ஐந்து கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்த நிலையில் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெறவிருந்த இந்தப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இருதரப்பினரும் அறிவித்துள்ளனர்.