பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஆனால் அவர் ஃபைனல் லிஸ்டில் இடம் பெறாமல் போனது தான் அதிர்ச்சி. இந்நிலையில் அவர் Me too ல் பாலியல் புகார் அளித்துள்ளார்.
இதில் அவர் புகழ் பெற்ற இயக்குனர் ஒருவரை சந்திக்க சென்றபோது யாஷிகாவின் அம்மா மூலமாக பாலியல் ரீதியாக அணுக முயற்சித்தாராம். அப்பா வயதுள்ள அவர் நேரடியாக என்னை துன்புறுத்தல் செய்திருந்தால் நான் நிச்சயமாக புகார் கொடுத்திருப்பேன். அவரின் பேரை சொல்ல விரும்பவில்லை.
அதே போல பொது இடத்தில் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு சரியான பதிலடி கொடுத்தாராம். போலிசில் அது பற்றியும் புகார் கூறியிருந்தாராம்.
அது மட்டுமல்ல அண்மையில் ஒரு வீடியோவில் போலிஸ்காரர் ஒருவர் ஒரு பெண்ணிடம் என்ன ரேட் என கேட்ட வீடியோ வைரலானது. அதில் இருந்த பெண் நான் தான் என கூறியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.