18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பான இருநீதிபதிகளின் தீர்ப்பு குறித்து, நடிகை கஸ்தூரி அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது அந்த டிவிட்டர் பதிவில் நடிகை கஸ்தூரி திருநங்கைகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சை எழுந்தது.
இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தி போயஸ் கார்டன் பகுதியில் உள்ள நடிகை கஸ்தூரியின் வீட்டை, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த திருநங்கைகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.