யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தை அழகு படுத்தும் செயற்திட்டம் நல்லூர் பிரதேச சபையினரால் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
சபையின் தவிசாளர் தலைமையில் 50 பயன்தரு மரங்கள் பல்கலைக் கழக சூழலில் நடப்பட்டன.மரங்களைப் பாதுகாக்கும் வகையில் நெற்றினால் அமைக்கப்பட்ட வேலிகளும் போடப்பட்டன.
அமைக்கப்பட்ட சுற்று வேலிகளில் மரம் வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களும் தொங்க விடப்பட்டுள்ளன.