வடக்கு மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெடி குண்டு தாக்குதலை அடுத்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடருந்து நிலையம் , தொடருந்து பாதைகள், தேவாலயங்கள், கோயில்கள், மின் நிலையங்கள், அரச கட்டடங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், பேருந்து நிலையங்கள், நெடுஞ்சாலைகள், பொதுச் சந்தை போன்ற இடங்களில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.