Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது சிறுமி

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது சிறுமி

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான், தொட்டியடிப்பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

தொட்டியடிப்பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பிரதேசவாசிகள் ஒட்டுச்சுட்டான் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

மேலும், சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …