Friday , March 22 2024
Home / சினிமா செய்திகள் / வாழ்க்கையை எதிர்கொள்ள இளம்பெண்களுக்கு தைரியம் வேண்டும்: திரிஷா

வாழ்க்கையை எதிர்கொள்ள இளம்பெண்களுக்கு தைரியம் வேண்டும்: திரிஷா

வாழ்க்கையை எதிர்கொள்ள இளம்பெண்களுக்கு தைரியம் வேண்டும்: திரிஷா

நடிகை திரிஷா மோகினி, கர்ஜனை, 1818, சதுரங்க வேட்டை-2, 96, சாமி-2, ஹேய் ஜூட் ஆகிய 7 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இவற்றில் மோகினி, கர்ஜனை ஆகியவை கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள்.

அதிக படங்களில் நடிப்பதால் சந்தோஷத்தில் இருக்கும் திரிஷா அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- ஒரே நேரத்தில் 7 படங்களில் நடிக்கிறீர்களே எப்படி முடிகிறது?

பதில்:- இந்த ஆண்டு 10 படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது இலக்காக இருக்கிறது. அதிக படங்களில் ஒரே நேரத்தில் மாறிமாறி நடிப்பது கஷ்டம்தான். ஆனாலும் பரவாயில்லை. ஓய்வில்லாமல் படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. நான் தற்போது நடித்து வரும் அனைத்து படங்களுமே நல்ல கதைகள். அதனால் அவற்றை விடுவதற்கு மனமில்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

கேள்வி:- உங்களை விமர்சிப்பவர்கள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்:- அவர்களைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அவர்கள் அப்படியே இருக்கட்டும். சிலர் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வார்கள். ஆனால் அதை அவர்கள் கடைபிடிக்கமாட்டார்கள். அப்படிபட்டவர்களை பார்க்கும்போது எனக்கு கோபம் வரும். என் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி நடக்கிறேன். கவலைகள் வரும்போது சிறிது நேரம் அழுவேன். அதன்பிறகு அவை மாயமாக மறைந்து விடும்.

கேள்வி:- படங்கள் தோல்வியை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்.

பதில்:- வயிறு நிறைய ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு நன்றாக தூங்கி விடுவேன். தூங்கி எழுந்த பிறகு தோல்வி கொடுத்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு விடுவேன்.

கேள்வி:- உங்களை பயமுறுத்துகிற விஷயம் ஏதாவது இருக்கிறதா?

பதில்:- யாராவது தலையணையை வைத்து என் முகத்தை அழுத்தி மூச்சை நிறுத்தி விடுவார்களோ என்று பயமாக இருக்கும்.

கேள்வி:- இளம்பெண்களுக்கு சொல்லும் அறிவுரை என்ன?

பதில்:- இளம்பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். உங்கள் கனவுகளை சாதிக்கிற வாழ்க்கையை எதிர்கொள்ள துணிச்சலாக அடியெடுத்து வையுங்கள்.

கேள்வி:- உங்கள் திருமணத்துக்கு பிறகு நடிப்பீர்களா? வீட்டோடு இருப்பீர்களா?

பதில்:- இந்த காலத்து பெண்கள் வீட்டையும், வேலையையும் சிறப்பாக கவனித்துக்கொள்கிறார்கள். திறமையான நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள்.

கேள்வி:- உங்களுக்கு காதலர் இருக்கிறாரா? பொய் சொல்லக்கூடாது.

பதில்:- சரி பொய் சொல்லவில்லை. காதலர் பற்றி இப்போது எதுவும் பேச விரும்பவில்லை.

கேள்வி:- கடவுள் உங்கள் முன்னால் வந்தால் என்ன கேட்பீர்கள்?

பதில்:- எதுவும் கேட்கமாட்டேன். எனக்கு என்ன வேண்டும் என்று கடவுளுக்கு தெரியும்.

இவ்வாறு திரிஷா கூறினார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

 

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …