Friday , April 19 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / ராஜமௌலியை நெகிழ வைத்த ஜப்பான் ரசிகர்கள்

ராஜமௌலியை நெகிழ வைத்த ஜப்பான் ரசிகர்கள்

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியான ‘பாகுபலி 2’ படத்தை ஜப்பானில் ரசிகர்களுடன் பார்த்து நெகிழ்ந்திருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த பிரம்மாண்டமான படம் ‘பாகுபலி 2’. இப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வியந்து பார்க்க வைத்தது.

சுமார் 1700 கோடி வசூலித்த இந்தப் படம் ஜப்பான் நாட்டில் கடந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி வெளியானது. அங்கு 100 நாட்களுக்கும் மேல் ஓடி 15 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. ஜப்பான் சினிமா ரசிகர்கள் ‘பாகுபலி 2’ படத்தை வெகுவாக ரசித்து மகிழ்ந்தார்கள்.

தற்போது ஜப்பான் வினியோகஸ்தர் அழைப்பின் பேரில் படத்தின் இயக்குனர் ராஜமௌலி, தயாரிப்பாளர் ஷோபு ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். அங்கு ஜப்பான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ‘பாகுபலி’ பற்றிய பல விஷயங்களை ராஜமௌலி பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் ‘பாகுபலி 2’ படத்தின் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. அதில் இயக்குனர் ராஜமௌலி கலந்துக் கொண்டார். ஜப்பான் ரசிகர்களுடன் ராஜ மௌலி புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் படம் பார்த்த ரசிகர்கள் ‘பாகுபலி’, ‘பாகுபலி’ குரல் எழுப்ப ராஜமௌலி நெகிழ்ந்திருக்கிறார். ஜப்பானில் வரவேற்பை கண்டு அங்குள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Check Also

இத்தாலியில் கொரோனா பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது

இத்தாலியில் கொரோனா பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது

இத்தாலியில் கொரோனா பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு …