Friday , April 19 2024
Home / அரசியல் / பா.ஜ.,வுடன் கைகோர்த்த காங்.,: மிசோரம் மாநிலத்தில் திருப்பம்

பா.ஜ.,வுடன் கைகோர்த்த காங்.,: மிசோரம் மாநிலத்தில் திருப்பம்

எதிரும், புதிருமாக உள்ள, காங்., – பா.ஜ., கட்சிகள், மிசோரம் மாநிலத்தில், சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில் அதிகாரத்தை கைப்பற்ற, ஒரே அணியில் கைகோர்த்துள்ளது, அக்கட்சிகளின் மேலிட தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கிழக்கு மாநிலமான, மிசோரமில், முதல்வர், லால்தன்வாலா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. மிசோரம் மாநிலத்தில், சக்மா மாவட்ட மக்களுக்காக, சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில், 1972ல் துவங்கப்பட்டது. இந்த கவுன்சிலுக்கான தேர்தல், ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். இதன்படி, கவுன்சில் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், மிசோரம் தேசிய முன்னணி, எட்டு இடங்களிலும், காங்கிரஸ் ஆறு இடங்களிலும், பா.ஜ., ஐந்து இடங்களிலும் வென்றன.

தேர்தல் முடிவையடுத்து, ‘மிசோரம் தேசிய முன்னணியுடன், பா.ஜ., கூட்டணி அமைக்கும்’ என, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா கூறியிருந்தார். ஆனால், மிசோரமில் உள்ள, காங்., – பா.ஜ., தலைவர்கள், தங்களுக்குள் கூட்டணி அமைத்து, கவுன்சில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளனர். உள்ளூர் தலைவர்களின் இந்த முடிவு, பா.ஜ., மற்றும் காங்., மேலிடத் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி, மிசோரம் மாநில விளையாட்டுத் துறை அமைச்சரும், காங்., தலைவருமான, ஜோதின்லுங்கா கூறுகையில், ”சக்மா தன்னாட்சி கவுன்சிலுக்கு மட்டுமே, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளோம்,” என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv