எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் போலீசார் நுழைந்தனர்
சொத்து குவிப்பு வழக்கில் சசிக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் போலீசார் நுழைந்தனர்.அந்த ரிசார்ட்டிற்குள் 200க்கம் மேற்பட்ட அதிவிரைவுப்படை போலீசார் உள்ளே சென்று தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து, அங்கு கலவரம் வெடித்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிதறி ஓடினர்.
கூவத்தூரில், மத்திய மற்றும் வடக்கு மண்டல ஐ.ஜி., தலைமையில் எஸ்.பி., மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 8 தாசில்தார்கள் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு மாநில அரசு பஸ்களை போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.