Tuesday , April 16 2024
Home / முக்கிய செய்திகள் / ஈரான் அணுத்திட்டம் குறித்து புதிய ஒப்பந்தம்: அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் பேச்சுவார்த்தை

ஈரான் அணுத்திட்டம் குறித்து புதிய ஒப்பந்தம்: அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் பேச்சுவார்த்தை

2015 ஆம் ஆண்டு ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், ஈரான் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நாடுகளாக கருதப்படும் நாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.அவை, பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் மத்திய கிழக்கில் அதன் பங்கு ஆகியவை அடங்கிய புதிய ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியாது என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி வருகிறார். அதற்கான காலக்கெடு மே 12 எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2015ஆம் அண்டு போடப்பட்ட அந்த ஒப்பந்தம் ஏமன், சிரியா மற்றும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளை உள்ளடக்கி இருக்க வேண்டும். எனவே அந்த ஒப்பந்தம் “பைத்தியக்காரத்தனமானது” ஆகையால் அதை விட சிறப்பான ஒரு ஒப்பந்தம் உருவாகலாம் என்றார்.

அமெரிக்கா அதன் அணுஆயுத ஒப்பந்தங்களில் உறுதியாக இல்லாவிட்டால் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற கூடாது என பிரான் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் மத்திய கிழக்கில் அதன் பங்கு ஆகியவை அடங்கிய புதிய ஒப்பந்தம் போடப்படும் என அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் மக்ரூங் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்கல் வெள்ளியன்று அமெரிக்காவிற்கு விஜயம் செய்து ஒப்பந்தத்தை நிராகரிக்கக் கூடாது என டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

தற்போதைய ஒப்பந்தம் 2025 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது.

மேலும், அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினால் இரான் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv