இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு காதல் கடிதம் எழுதிய இந்திய டாக்டர் பணி செய்ய தடை
இங்கிலாந்தில் நோயாளிக்கு காதல் கடிதம் எழுதிய இந்திய டாக்டர் பணி செய்ய தடை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்தை சேர்ந்த டாக்டர் சசியேந்திர அமரகிரி (59). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரிடம் ஒரு பெண் வயிற்று கோளாறுக்கு சிகிச்சை பெறவந்தார்.
சிகிச்சை அளித்து அனுப்பி விட்டு இப்பெண்ணுக்கு டாக்டர் அமரகிரி காதல் ரசம் சொட்ட கடிதம் எழுதினார். உன்னை எனது கிளினிக்கில் முதன் முறையாக பார்த்தபோது அதிர்ச்சியும், ஆனந்தமும் அடைந்தேன் என அதில் கூறப்பட்டிருந்தது.
அக்கடிதம் பெற்றவுடன் அப்பெண், டாக்டர் மீது போலீசில் புகார் செய்தார். பின்னர் இந்த விவகாரம் மருத்துவ பணி நடுவர் சேவை மையத்துக்கு சென்றது.
அதை தொடர்ந்து அவர் டாக்டர் பணி செய்ய தடை விதிக்கப்பட்டது.